ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
மூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா
இந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி வருடம் பங்குனி
மாதம் 25 ஆம் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்கு,
20 கிராமங்களைச் சேர்ந்த
ஏராளமான பக்தர்கள்,பக்தைகள்
விரதம் இருந்து பூக்குழி இறங்கினார்கள்.
இந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது
குருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால்
பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல், ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்கப்பட்டது.
அன்னதானம்:
ஆடைதானம்:
நமது குருவின் அதிகமான சொற்பொழிவில் இடம்பெற்ற அடியார்களுக்கான ஆடை தானமும் இடம்பெற்றது.
உற்சவ ஊர்வலம்:
முன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ
ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின்
அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு உற்சவ ஊர்வலத்துடன் கிராம வலம்
வந்தனர்.
பூ மிதித்தல்:
வலம் வந்ததன் முடிவாக,மாலை 06:00 மணியளவில்
கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினார்கள்.
முத்துமாரியம்மனிடம்
சங்கல்பம் கொண்டு, விரதம்
இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி, முத்துமாரியம்மனின்
அருளைப் பெற்றனர்.
நன்றி:
இந்த அன்னதானத்தில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அய்யாவின்
கரங்களோடு தங்களையும் இணைத்துக்கொண்ட நம் தன்னார்வத்தொண்டர்களுக்கு ஆன்மீகக்கடல் மற்றும்
ஆன்மிகஅரசு குழுமம்
சார்பாக மிக்கநன்றி.
ஓம் சிவசிவ ஓம்!
ஓம் சிவசிவ ஓம்!!
ஓம் சிவசிவ ஓம்!!!