ஓம் மஹா கணபதியே சரணம் !
ஓம் அண்ணாமலையாரே சரணம் !
ஓம் உண்ணாமலையம்மன் தாயே சரணம் !
மஹா சிவராத்திரியும் குல தெய்வ வழிபாடும்:
மஹா சிவராத்திரி
என்றதும் நம் மனதில் பட்டென்று வருவது நம் குலதெய்வமே. அப்படி குலதெய்வம்
தெரிந்தவர்கள் தங்களது குலதெய்வத்தினை வழிபட்டு விட்டு, கீழேக் கூறப்பட்டுள்ள
வழிபாட்டினை மேற்கொண்டால் எண்ணில்லடங்க பல நன்மைகளை அடைந்து வைத்துள் வாழ்வாங்கு
வாழ்வார் என்பதில் எள்ளவும் ஐய்யமில்லை. குலதெய்வம் யாரென்று தெரியாத அன்பர்கள்
தம் குலதெய்வத்தைக் கண்டறிய வேண்டி அய்யாவின் முயற்சினால் ஆன்மீக ஆராய்ச்சியின்
மூலம், சில நுணுக்கமான பயிற்சிகளின் மூலம், சில சான்றோர்களின் ஆசிவுடன் அய்யா சகஸ்ரவடுகர் ஆராய்ந்து கண்டறிந்த விளக்கங்களை இந்த
ஆராய்ச்சி முடிவுகளை ஆன்மீக கடல் வாயிலாக
மக்களோடு ஆன்மீக அன்பர்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

ஆன்மீக அன்பர்கள்
அனைவருக்கும் ஆன்மீக கடலின் அன்பு வணக்கங்கள் நமது அய்யா சகஸ்ரவடுகர்
தன்னுடைய இடைவிடாத தன்னலமற்ற ஆன்மீக முயற்சியின் மூலம் பிறத்தியார்
பயன்படும் வண்ணம் அநேக ஆன்மீக ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதன் முடிவினை மக்களுக்காக
பயன்படும் வண்ணம் இந்த ஆன்மீக கடல் மற்றும் ஆன்மீக அரசின் வலைதளங்களின் மூலம்
பதிவு செய்துவருகிறார் . இந்த நேரத்தில் அய்யா சகஸ்ரவடுகர்
அவர்களுக்கு நமது நன்றியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மில் பலர் தனது
குலதெய்வம் யாரென்பது தெரியும். குலதெய்வம் பொதுவாக தந்தை வழித்தொட்டு வரும் ஒரு
தெய்வமாகும். நம் முன்னோர்கள் இருந்த
இருப்பிடத்தைக் குறிப்பிடுவது அந்த குலதெய்வம் வழிபாடு. நமது முன்னோர்கள் தத்தா,
தத்தாவிற்கு தத்தா இப்படி பல சந்ததிகள் தொட்டு வாழ்ந்து வந்த இடத்தை அங்கு ஒரு
தெய்வத்தை நிறுவி அவர்கள் வழிபட்டு, அதன் மூலம் அவர்கள் சக்தி அடைந்து நமது நம்
தோன்றல் வரை நமக்கு பின்வரும் சந்ததிகள் அதை பராமதித்து அவர்களின் ஆசிபெறும் பொருட்டு
குலதெய்வம் வழிபாடு முந்தைய காலத்தில் இருந்து இன்றுவரை என்றும் தொடர்ந்து
வருகிறது. அந்த வகையில் குலதெய்வம் அறியாதவர்கள் தங்கள்ளது குலதெய்வம் கண்டறிய
எண்ணி பல குறுஞ்செய்திகளை நமது வலைத்தளத்திர்க்கு அனுப்பிருந்தார்கள், அதன்
அடிப்படையில் அய்யா சகஸ்ரவடுகர் மேற்கொண்ட ஆன்மீக
ஆராய்ச்சியின் முடிவினை இக்கட்டுரையில் பார்ப்போம். இது ஆராய்ச்சி மட்டுமல்ல
அய்யாவால் நிகழ்த்தி காட்டபட்ட ஒரு உண்மைச் சாதனை என்றே சொல்லவேண்டும்.
குலதெய்வம் அறியாதவர்களுக்குரிய பரிகாரம்:
தங்கள்ளது குலதெய்வம் அறியாத ஆன்மீக அன்பர்கள் வரும் மஹா சிவராத்திரி அன்று உங்கள் அருகில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களில் சென்று கோவிலில் நுழையும்போது ஓம் சிவசிவ ஓம் என்ற மந்தரத்தை மனதில் பரிகாரம் முடியும்வரை ஜபித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த மந்தர ஜபத்தினலே பல மற்றங்களை உங்களாலே உணர முடியும். பின்பு சிவ பெருமானுக்கு இரண்டு விளக்கு திரியினை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றவேண்டும், இதே போல் மற்றொரு தீபம் சேர்த்து மொத்தம் ஒரு சிவாலயத்தில் இரண்டு தீபங்கள் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பின்பு குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
தங்கள்ளது குலதெய்வம் அறியாத ஆன்மீக அன்பர்கள் வரும் மஹா சிவராத்திரி அன்று உங்கள் அருகில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்களில் சென்று கோவிலில் நுழையும்போது ஓம் சிவசிவ ஓம் என்ற மந்தரத்தை மனதில் பரிகாரம் முடியும்வரை ஜபித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த மந்தர ஜபத்தினலே பல மற்றங்களை உங்களாலே உணர முடியும். பின்பு சிவ பெருமானுக்கு இரண்டு விளக்கு திரியினை ஒன்றாக திரித்து தீபம் ஏற்றவேண்டும், இதே போல் மற்றொரு தீபம் சேர்த்து மொத்தம் ஒரு சிவாலயத்தில் இரண்டு தீபங்கள் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.பின்பு குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
இதே போல் ஒவ்வாரு
சிவாலயங்களென மொத்தம் ஏழு சிவாலயங்களில் இரண்டு தீபங்கள் இட்டு வழிபாடு செய்ய
வேண்டும்.அன்னதானம் ஏழு சிவாலயங்களில் செய்யலாம், அப்படி இல்லையென்றால் எதாவது ஒரு
சிவ சிவாலயத்தில் மட்டும் செய்தால் போதுமானது.இந்த ஏழு சிவாலயங்கலும் மிக பழைமைய
கோவிலாக இருந்தால் மேலும் சிறப்பாகும்.
இவ்வாறு நாம்
செய்வும் பொது நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்றுவரை நாம் குலதெய்வ வழிபாடு
செய்த பலனையும், குலதெய்வத்தின் அருளை உடனடியாகப் பெறலாம்.
பொதுவாக மஹா சிவராத்திரி
அன்று அனைவரும் நமசிவாய என்ற மந்தர தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள
பஞ்சபூத ஸ்தங்கலுக்கு சென்று அங்குள்ள சிவ பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு
என்பார்கள். அப்படிருக்க நாம் ஏழு சிவாலயங்கள் சென்று அங்குள்ள சிவ பெருமானை
வழிபாடு செய்வது என்றால் பஞ்சப்பூத ஸ்தங்கலில் கிடைக்கும் புண்ணியத்தை விட
பன்மடங்கு அதிகமாகும், அப்படிருக்க இது கிடைப்பது மிகவும் அரிதுல்லவா!
ஏழு சிவாலயங்களில் உள்ள சிவ(ருத்ரன்) பெருமானின் ருத்ர தரிசனம் காணக்கிடைப்பது நாம் செய்த புண்ணியமாகும். மேலும் இந்த ஏழு சிவாலயங்களில் உள்ள ருத்ர தரிசனத்தை மஹா சிவராத்திரி அன்று காண்பதால் நம் ஏழுஏழு ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளும், பாவங்களும் நாம் இட்ட தீபசுடரில் எரிந்து, நம்முடைய ஆன்ம சுத்தமாகி நம் வாழ்கை தீப ஒளிபோல் பிரகசித்து, ஆனந்தம் பெற்று மென்மேன்லும் உயர்வோம்.
சிவராத்திரி:
சிவராத்திரி = சிவம் + இரா
+ திரி = சர்வ சிவம் என்னும் முப்பெரும் சக்திகளை
அடைய ஓர் இரவு வழிபாடு = உண்மை சிவசூட்சுமம்
அன்பர்களே,ஆம்.. நமது அய்யா திரு
சகஸ்ரவடுகரின் ஆன்மீக பயணத்தின் ஒரு நிழற்குடை தான் இந்த கட்டுரை .
சிவசூட்சுமதினை
நமக்கு அளித்த அய்யா அவர்களுக்கு இந்த தருணத்தில் நம் நன்றிகளை தெரிவித்து கொள்வோம் .
சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும்
சில சமயங்களில் மிக அரிதாக த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில்
வரும். மாதத்திற்கு ஒன்று வீதம்
மொத்தம் பன்னிரண்டு மகா சிவராத்திரியும் சேர்த்து .
மஹா சிவராத்திரி :
இது வருடத்திற்கு ஒரே
ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை
நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
இந்த துன்முகி வருடம்
– மாசி 12ம் நாள் வெள்ளிக் கிழமை (24-02-2017) மஹா சிவராத்திரி வருகின்றது. மேலும் அதே நாளில் பிரதோஷம் வருவது மிக சிறப்பானதாகும்.
இதுபோன்று ஓரே நாளில்
மஹா சிவராத்திரியும், பிரதோஷமும் வருவது முப்பத்திமூன்று வருடங்களுக்கு ஒரு முறை வரும்
என்பதால், இந்த மஹா சிவராத்திரி மேலும் ஒரு தனி சிறப்பாகும்.
எண்ணிய எல்லாம்
நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்
அய்யன் அர்ஜூனன்
அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,
கண்ணப்ப நாயனார்
என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,
பகீரதன் தவப்பலன்
கங்கையை பாரிக்கு தந்தது,
என்றும் பதினாறு
வயதுடையோன்
மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,
அன்னை உமையாளுக்காக
சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக
ஆனது, இப்படி கூறிக்கொண்டே
செல்லலாம்.
முதல் கால பூஜை:
இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.
அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் .
பிறவி பிணி
நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .
இரண்டாவது கால பூஜை:
திருவடி தேடி சென்ற பரம்பொருள் "விஷ்ணு" அவர்களால் அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.
மூன்றாவது கால பூஜை:
அம்பாள் அவர்கள்
செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .
இந்த காலத்தில்
தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு
அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன்
பூஜை செய்வது நன்று .
இந்த காலத்திற்குரிய
சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக்
காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக
ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜை:
முப்பத்து
முக்கோடி தேவர்களும், முனிவர்களும்,
ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மஹா சிவராத்திரி
தினம் முழுவதும் நெற்றியில் திருநீறு உடன் இருக்கவும்.
(திருநீறு மகிமை
பலமுறை நம் அய்யா விளக்கியிருகிரார்கள், நாம் அறிந்ததே)
உண்ண நோன்பு இன்றியமையாதது.
இதில் விதிவிலக்கு
உண்டு - உடல்நிலை சரியில்லதவர்கள்,
வயோதிகர்கள் மற்றும் குழந்தைகள் உணவு உட்கொள்ளலாம் ( அரை வயிறு அளவு / மிக குறைந்த அளவு / எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளலாம்
)
அதிகாலை எழுந்து
காலைக் கடனை முடித்து பின்பு அருகில் உள்ள சிவாலயங்களில் சென்று அபிஷேக ஆராதனைகளைக்
கண்டு சிவத்திலே கலக்கலாம்.
சிவ நாமம் சொல்லாம். திருமுறைகளைப் பாடலாம்.
மௌனமாக சிவத்தினை மட்டும் சிந்திக்கலாம்.
இரவு ( சிவராத்திரி அன்று ) ஆலயத்தில் தங்குவது உத்தமம்.
அப்படி திருகோவிலில்
தங்கும் பொழுது இரவு உறங்காது இருப்பது அவசியம் .
தியானம் செய்தல் நன்று. தியான விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் .
ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசக்தி ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !!!