ஓம் ஞான கணபதியே சரணம் !
ஓம் அண்ணாமலையாரே சரணம் !
ஓம் பார்வதி தாயே சரணம் !
ஓம் குரு தட்சணா மூர்த்தியே சரணம் !
ஓம் ஸ்ரீ சகஸ்ரவடுகர் நாமம் சரணம் !
ஓம் ஈஸ்வரபட்டா அய்யா திருவடி சரணம் !
ஓம் சிவ சிவ ஓம் !!!
ஓம் அண்ணாமலையாரே சரணம் !
ஓம் பார்வதி தாயே சரணம் !
ஓம் குரு தட்சணா மூர்த்தியே சரணம் !
ஓம் ஸ்ரீ சகஸ்ரவடுகர் நாமம் சரணம் !
ஓம் ஈஸ்வரபட்டா அய்யா திருவடி சரணம் !
ஓம் சிவ சிவ ஓம் !!!
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .
வாழ்க பல்லாண்டு !
சிவராத்திரி = சிவம் + இரா + திரி = சர்வ சிவம் என்னும் முப்பெரும் சக்திகளை அடைய ஓர் இரவு வழிபாடு = உண்மை சிவசூட்சுமம்
அன்பர்களே,ஆம்.. நமது அய்யா திரு சகஸ்ரவடுகரின் ஆன்மீக பயணத்தின் ஒரு நிழற்குடை தான் இந்த கட்டுரை .
வாழ்க பல்லாண்டு !
சிவராத்திரி = சிவம் + இரா + திரி = சர்வ சிவம் என்னும் முப்பெரும் சக்திகளை அடைய ஓர் இரவு வழிபாடு = உண்மை சிவசூட்சுமம்
அன்பர்களே,ஆம்.. நமது அய்யா திரு சகஸ்ரவடுகரின் ஆன்மீக பயணத்தின் ஒரு நிழற்குடை தான் இந்த கட்டுரை .
ஓம் சிவசிவ ஓம் !!
அய்யா சகஸ்ரவடுகர் நாமம்.
" சிவராத்திரி " மற்றும் " மஹா சிவராத்திரி " பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம்.
சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக
அய்யா சகஸ்ரவடுகர் நாமம்.
" சிவராத்திரி " மற்றும் " மஹா சிவராத்திரி " பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம்.
சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக
த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில் வரும். மாதத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் பன்னிரண்டு மகா சிவராத்திரியும் சேர்த்து .
மஹா சிவராத்திரி
இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 07-03-2016 திங்கட்கிழமை வருகின்றது.
எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்
அய்யன் அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,
கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,
பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,
என்றும் பதினாறு வயதுடையோன் மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,
அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.
மஹா சிவராத்திரியும் நான்கு கால பூஜைகளும் :
முதல் கால பூஜை
இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜையாகும்.
அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் .
பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .
இரண்டாவது கால பூஜை
திருவடி தேடி சென்ற பரம்பொருள் "விஷ்ணு" அவர்களால் அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.
மூன்றாவது கால பூஜை
அம்பாள் அவர்கள் செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் பூஜை செய்வது நன்று .
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜை
முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மஹா சிவராத்திரியும் குல தெய்வ வழிபாடும்
இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாம் நமது குல தெய்வத்தினை வழிபடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளோம்.
அப்படி செய்வதன் சூட்சுமத்தை நாம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
நாம் எப்படி எங்கு வேண்டினாலும் ஈசனது அருள் கிட்டும்.
அன்பர்கள் கவனத்திற்கு மஹா சிவராத்திரி நன்நாளில் நடைபெறும் வழிபாடுகளை பார்த்தோம்.
இப்பொழுது ஈசனது அருள் பெரும் நெறியினை காண்போம்.
ஓம் சிவசிவ ஓம்
மஹா சிவராத்திரி தினம் முழுவதும் நெற்றியில் திருநீறு உடன் இருக்கவும்.
( திருநீறு மகிமை பலமுறை நம் அய்யா விளக்கியிருகிரார்கள், நாம் அறிந்ததே )
உண்ண நோன்பு இன்றியமையாதது.
இதில் விதிவிலக்கு உண்டு - உடல்நிலை சரியில்லதவர்கள், வயோதிகர்கள் மற்றும் குழந்தைகள் உணவு உட்கொள்ளலாம் ( அரை வயிறு அளவு / மிக குறைந்த அளவு / எளிதில் செரிமானம் ஆகும் தன்மை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளலாம் )
அதிகாலை எழுந்து காலை கடனை முடித்து பின்பு அருகில் உள்ள சிவாலயங்களில் சென்று அபிஷேக ஆராதனைகளை கண்டு சிவத்திலே கலக்கலாம்.
சிவ நாமம் சொல்லாம். திருமுறைகளை பாடலாம்.
மௌனமாக சிவத்தினை மட்டும் சிந்திக்கலாம்.
இரவு ( சிவராத்திரி அன்று ) ஆலயத்தில் தங்குவது உத்தமம்.
அப்படி திருகோவிலில் தங்கும் பொழுது இரவு உறங்காது இருப்பது அவசியம் .
தியானம் செய்தல் நன்று. தியான விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம் .
குருவினது அடி பணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் - அவ்வை அம்மையார்
குருவினது துணையோடு சிவத்தினை அடையலாம்.
நமது அய்யா சகஸ்ரவடுகர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சென்று நாமும் சிவத்தினை அடைவோமாக !!!
ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !! ஓம் சிவசிவ ஓம் !!!