கலியுகம்
என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த
கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி
அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட
அறிவியல் வழிகாட்டுகிறது.
.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு
நிறுவனம்,நமது
மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக
பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே
இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.
இந்த மைத்ர முகூர்த்த நேரம்
இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு
மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின்
நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த
நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின்
நேரத்திலிருந்து 5.30 மணி
நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன்
தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும்
ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய
நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில்
இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த
வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள்
செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல்
வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த
நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை
திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச்
செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது
ரூ.1,99,500/- வெகு
சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக்
கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை
வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
விஜய & ஜய வருடத்தின் மைத்ர
முகூர்த்தம் வரும் நாட்கள்(1.1.2015 முதல் 13.4.2015
வரை)
16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை;
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை;
13.2.15 வெள்ளி இரவு 12 முதல் 2 வரை;
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை;
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை;
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை;
8.4.15 புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை;
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ