இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை
சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு
கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம் மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட
வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும்
காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்?
ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்
என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத
ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம்.
இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம்
போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்;
பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை
கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே
அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்குள் வந்ததும் உடலில் ஏற்படும் உணர்வு) போன்றவை ஒருபோதும்
வராது.
சோற்றுநீரின் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச்சாலையில்
ஆராய்ந்து பி.எச்.டி.பட்டம் பெற்றுவிட்டார்.இதே போல நமது பல பழக்கவழக்கங்கள்,மரபுகள்
மேல்நாட்டினரால் விஞ்ஞான வடிவம் பெற்றுக்கொண்டிருக்கின்றன;
நன்றி:தொழில் & பல்சுவை மாத இதழ்,பக்கம் 13,வெளியீடு டிசம்பர்
2013
கோடை காலத்தை சமாளிக்க டிவி விளம்பரங்களில் வரும் கலர் கலரான குளிர்பானங்களை
அருந்தாதீர்கள்;அவைகளை அருந்தி முடித்ததும் நமக்கு தண்ணீர் தாக உணர்வுதான் ஏற்படும்.
அதற்குப்பதிலாக,இளநீர்,மோர்,தர்ப்பூசணி போன்றவைகளை தினமும் சாப்பிடலாம்;காதிபவன்கள்
மற்றும் சித்தா மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கும் குல்கந்து வாங்கி தினமும் சாப்பிடலாம்.
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ