புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை,ஆபரணங்கள்,பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும்.ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால்,நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க்கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல்,அரிசி,கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள்,பதார்த்தங்கள் தரக்கூடாது.பணம்,முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது.அப்படிக்கொடுத்தால்,வாங்கியவர் வளமடைவார்.
கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.