
தற்போதைய இயந்திர கதியான வாழ்வில் எல்லாவற்றிலும் வேகம்! சில நேரம் விவேகமில்லாத வேகம் விபத்தில் முடிந்துவிடுகின்றது. வெளியில் சென்றவர் வீடு திரும்புவார் என்பது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. மரண பயத்தைப் போக்கும் சக்தி சிவனுக்கு உண்டு.
கீழ்க்காணும் மந்திரத்தை தினசரி சொல்வதன்/ஜபிப்பதன் மூலமாக மரண பயத்தை வெல்லலாம்.
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மகாதேவாதே நமக
(விளக்கம்:மரணத்தை வென்றவரே! ருத்ரனே! விஷத்தை உண்டும், மரணத்தை அண்டவிடாதவரே, அம்ருதத்தை உடையவரே! சர்வமும் ஆனவரே! மகாதேவனே உன்னை வணங்குகிறேன்)